ADD

Friday, February 8, 2013

‘விஸ்வரூபம், கடல் உட்பட ரூ.1 கோடி மதிப்புள்ள புதுப்பட டி.வி.டி.க்கள் பறிமுதல் : 4 பேர் தூத்துக்குடியில் கைது

‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகத்தில் நேற்று
வெளியானது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் ‘விஸ்வரூபம்’
உள்ளிட்ட புதுப்படங்களின் திருட்டு டி.வி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக
திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன்
தலைமையில் தூத்துக்குடி மாநகர உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மாநகர
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தூத்துக்குடி நகரில் உள்ள கடைகளில்
அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது 5 கடைகளில் அனுமதியின்றி விற்பனைக்காக ஏராளமான திருட்டு
டி.வி.டி. கேசட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டி.வி.டி.
கேசட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் விஸ்வரூபம், கடல், டேவிட்,
கண்ணா லட்டு தின்ன ஆசையா, அம்புலி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட புதுப்பட
டி.வி.டி.க்களும், சில ஆபாச பட டி.வி.டி.க்களும் அடங்கும்.

இதுதொடர்பாக காஜா முகைதீன் (வயது 29), யாசர் அராபத் (27), சமீர் பாஷா
(21), பேச்சிமுத்து (31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது
கடைகளில் இருந்து கணினிகள், பென் டிரைவ்கள், 10 செல்போன்கள், 2 மோட்டார்
சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட டி.வி.டி.க்கள் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் என போலீசார் கூறினர்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.com/t31066-1-4#ixzz2KIXF1eIs
Under Creative Commons License: Attribution

No comments:

Post a Comment